Tuesday, May 8, 2012

Facebook முனாழரா .!!

சமீபத்தில் நமது சங்கத்தில் நடந்த " தர் ஹா-  தௌஹீத்" விவாதம், 
இந்தியா- பாக் கிரிக்கெட் மேட்ச்சுக்கு இணையான விறுவிறுப்புடன் இருந்தது . 
மிக உணர்ச்சி கரமாக அதே சமயம் யாரும் சொதப்பி விடக்கூடாதே
என்ற ( nail biting  ) டென்ஷனும் 
கடைசி வரை இருந்தது ...   
இரு அணியினரும் தங்களது கருத்துக்களை
மிக நாகரீகமாகவும் அதேசமயம் தீர்க்கமாகவும் வெளியிட்டனர் ... 

இதற்க்கு காரணம் எல்லோரும் அவரவர் கருத்துக்களை
இறையச்சத்தை முன்னிறுத்தி வெளியிட்டதுதான் ...

இந்த "முனாழரா" தொடர்பான என்னுடைய எண்ணங்கள் :

# அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் .!!
கருத்து வேறுபடுகிற விஷயத்தை கூட மிக நாகரீகமாக அலசுகின்ற ஒரு கண்ணியமான கூட்டமாக அவன் நம்மை ஆக்கி இருக்கிறான். 

# சகோதரர் சைனுதீன், " மதத்தை பற்றி விவாதித்தால் பகை வரும்"
அதனால் தவிர்ப்போம் என்று கூறுகிறார். 
அப்போ,, முகப்புத்தகம் கேடுகெட்ட அரசியலை அலசுவதற்கும் , நாணங்கெட்ட நாட்டு நடப்புகளை சொல்லி நகைப்பதற்க்கும் ,
தின்று விட்ட பிரியாணியை புகைப்படம் எடுத்து போடுவதற்கும் தானா ..?
( அபூ பைசல் பாய் மன்னிக்கவும் )
இல்லை .... இது போன்ற உபயோகமான இம்மை மறுமை வாழ்க்கைக்கு பயன் தரக்கூடிய ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும் அரிதான தருணங்களில் தான் நாம் முகப்புத்தகத்தை வியக்கிறேன். 
அதனால்...
விஷயம் தெரிந்தவர்கள் விவாதியுங்கள் ,
தெரியாதவர்கள் தெரிந்து கொள்கிறோம்...

இறைநேசர்கள் அணி :
முகப்புத்தகத்தில் இறைநேசர்கள் அணி கொஞ்சம்
மைனாரிட்டி யாக தான் இருக்கிறார்கள்...
அவர்கள் ( குறிப்பாக அபு ஹாஷிமா அண்ணன்) சொல்லவருவது,

"நாம் கடந்து வந்த பாதையை நமது வரலாற்றை
நமக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி நரகத்தின் விளிம்பில் இருந்த நம்மை அதிலிருந்து காப்பாற்றிய அதற்காக பாடுபட்ட தியாகம் செய்த
இஸ்லாமிய பிரச்சாரகர்கள் ( Dha'ee  ) மற்றும்
அவர்களது வரலாறுகளை பற்றி அடுத்த தலைமுறையினருக்கு நினைவூட்டுவது முக்கியம்".
சுருக்கமாக சொன்னால்
நாம் நம்முடைய வேர்களை அறிந்தால் தான்
புதிய கிளைகளை பரப்பி வளர முடியும்.
கடந்து வந்த பாதையை அறிந்தால் தான்
புதிய பாதையை அமைக்க  முடியும். 

இந்த வரலாறுகளையெல்லாம் மறந்ததால் தான்,
இப்போது நாம் நம்முடைய அடையாளங்களை தொலைத்து நிற்கிறோம்.  அந்த இறைநேசர்கள் எல்லாம் வாழ்ந்த காலத்தில்
ஒன்று பட்ட சமுதாயமாக இருந்தோம் நாம் ,, 
அனால் இன்று ..?,,
எல்லோருக்கும் விரல் நுனியில்
குர்ஆன் ,புகாரி, திர்மிதி
எல்லாம் கிடைக்கின்ற இந்த (enlightened period) காலகட்டத்தில்,
தெருவுக்கு ஒரு இயக்கம் என்று நிற்கிறோம்.
இதற்கு காரணம் என்ன ?
நம் முன்னோர்கள் சொல்லித்தந்த மார்க்க நெறிகளை
ஆய்வு என்ற பெயரில் கிண்டல் கேலி செய்வதும்
மரியாதை குறைவாக கையாள்வதும் தான் காரணம்""
என்பது சு .ஜ தரப்பு வாதம்.

இந்த கருத்து எனக்கு முற்றிலும் ஏற்புடையதே ..

வரலாறு முக்கியம் தான் ..
அதே சமயம் ...
அந்த வரலாற்று சுவடுகளில் எல்லாம் ஏகத்துவத்துக்கு வேட்டு வைக்கும் காரியங்கள் நடக்கின்றனவே ..?
தற்போதைய கூகிள் காலத்தில் பேஸ்புக்கிலும்,, யூ ட்யுபிலும்,, இந்த அனாச்சாரங்கள் பற்றிய பதிவுகள் கொட்டி கிடக்கின்றனவே ....
என்ன ? நீங்க பார்த்ததே இல்லையா ..? 

என்ன ..?
அப்படியான எதுவும் நடக்க வில்லை என்கிறீர்களா ..?
அல்லது,,, அவையெல்லாம் நடக்கிறது ஆனால்
அவை மார்கத்துக்கு உட்பட்டது தான் என்கிறீர்களா...?
அல்லது ... எவனோ முட்டாள் செய்கிறான்
அது பற்றி எனக்கு கவலை இல்லை ..
அப்படியான காரியங்களில் நான் ஈடு படுவதில்லை என்கிறீர்களா ..? 
அல்லது ...
வரலாறு சொல்வதோடு என் வேலை முடிஞ்சு போச்சு ...
என்று சொல்கிறீர்களா ..? 
அவற்றை கண்டித்து இது வரை ஒரு வார்த்தையாவது
எழுதி இருக்கிறீர்களா..?
( எனக்கு தெரிந்து இது வரை இல்லை )

உங்கள் எழுத்துக்களில் ஒரு வீச்சு இருக்கிறது ...
அல்லாஹ் உங்களுக்கு அற்புதமாக எழுதும் ஆற்றலை அளித்திருக்கிறான் ...
இது போன்ற தர்ஹா அனாச்சாரங்களையும் ,,, மூட பழக்கங்களையும்
உங்கள் கூரிய எழுத்துக்களை கொண்டு கண்டித்து எழுதுங்கள் ...
அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும்
ஆயுளையும் ஆரோக்கியத்தையும் விசலமாக்கட்டும் ...


இனி தௌஹீத் அணிக்கு வருவோம் ,,

""சமுதாயத்தில் தவறுகளை சுட்டிக்காட்டும் போது சிலர் ஏற்றுக்கொள்வார்கள் சிலர் மறுப்பார்கள்
அப்போது பிளவு வரத்தான் செய்யும்.
இதை சொன்னா அவன் கோபப்படுவானே ...?
மனசு நோகுமே என்றெல்லாம் கவலைப்பட்டால்
நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியை செய்ய முடியாது ""....
இது தௌஹீத் அணியின் வாதம் ( சுருக்கமாக ! )

ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்
பிளவு என்பது தௌஹீத் வாதிகளுக்கும் தர்ஹா வாதிகளுக்கும்
இடையில் உள்ள பிளவு அல்ல..
'ஏக' இறை வணக்கத்தை பிரச்சாரம்
செய்தவர்களுக்கு ள்ளேயே
'ஏக'ப்பட்ட பிளவுகள்.
இஸ்லாத்தின் ஒவ்வொரு அம்சத்தையும்
'ஆய்வு' செய்து, 'தூய' வழியில் பின்பற்றும்
பிரிவினரிடையே ஒருவருக்கொருவர்
மிக மோசமாக திட்டிக்கொள்ளும் அளவுக்கு மோதல்கள் ..
போலீஸ் ஸ்டேஷன் களில் புகார்கள்...
ஏன்..?

காரணங்கள் :( எனக்கு தெரிந்த வரையில் )

1) பணம் .
2) அதிகாரப்போட்டி.
3) தொண்டர்களின் பக்குவமின்மை.

தௌஹீத் வாதிகள் சொல்லவேண்டிய விஷயத்தை
பக்குவமா சொல்லியிருந்தா
விஷயம் என்னிக்கோ முடிஞ்சு போயிருக்கும் ...
( சீக்கிரம் முடியக்கூடாது ..
ஏன்னா பிசினெஸ் போயிரும் என்ற எண்ணமோ ..?)

இப்பொழுதும் கூட தௌஹீத் வாதிகளில் சில பேர் எழுதும்
( தத ஜ - இ த ஜ - சண்டைகள் ) பின்னூட்டங்கள்
ரொம்ப அநாகரீகமாகவும் முகம் சுழிக்க வைக்கிறமாதிரியும் இருக்கின்றன ... 
அப்போ தூய நபி வழி எங்க இருக்கு ..?

அதே போல,,
நீ தௌஹீத் வாதி இல்லையா, அப்போ நீ தர்ஹா அணி யை சேர்ந்தவன் ...
நீ கப்ரு வணங்கி .. நீ நரக வாதி ...
என்ற வார்த்தைகளை உடனடியாக அவிழ்த்து விடுகின்றனர் ....
இதுக்கு பேரு ஜார்ஜ் புஸ் டெக்னிக் ...
"நீ எங்களுக்கு ( அமெரிக்கா வுக்கு ) சப்போர்ட் பண்ணு ...
இல்லையா ... அப்போ நீ எதிரியை சேர்ந்தவன் " 
"There are two choices, be on our side, or you will considered as terrorists' side"

தௌஹீத் வாதிகள் இந்த அணுகுமுறையை கைவிட்டால் நலம் .

மாற்று மதத்தினரிடையே இஸ்லாத்தை கூறும் பிரச்சாரகர்களுக்கு
அவர்களுடைய பேச்சு, அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்
என்று தனி கவனம் செலுத்துகிறோம்.
அதே போல் நம் சகோதரர்களுடன் பேசும்போதும் அதே கவனத்துடன் அதே அக்கறையுடன், கேலி கிண்டல் தவிர்த்து, நல்ல வார்த்தை கொண்டு
Da'waa செய்யுங்கள் ..


எனவே ...
கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம்
தெரிந்தவர்கள் தெரிந்தவற்றை தெரிவியுங்கள் ..
தெரியாதவர்கள் தெரியாததை தெரிந்து கொள்கிறோம் ...
சொல்லவேண்டியதை நல்ல வார்த்தைகளை கொண்டு சொல்லுங்கள் ...

அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்யட்டும் ..!!!






Thursday, August 11, 2011

Very very important message ..!!! தவறாமல் படிக்கவும் !!


 முடி உதிர்வதை தடுக்க
முடி சம்பந்தமான மருத்துவ குறிப்புகள்: 
முடி உதிர்வதை தடுக்க
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்தநீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில்காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில்தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒருவாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில்போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்குமாறும்.
முடி கருப்பாக:
லமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய்எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்துதலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரைமாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
முடி வளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில்தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சிதலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்துசொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய:
நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும்மறையும்.

செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்துதலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரைமாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
முடி வளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில்தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சிதலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்துசொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய:
நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும்மறையும்.


Saturday, July 9, 2011

மூடு விழா ...


Blog ஆரம்பிச்சு முதல் முதலா ஒரு நல்ல விஷயம் எழுதலாம்னு நினைச்சா... ஒரு மூடு விழா news  தான் கிடைச்சுது...

பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் ருப்பர்ட் முர்டோக் கிற்கு சொந்தமான
"News of the World  பத்திரிகை நேற்றுடன் (10 /6/2011 ) மூடப்பட்டது..

168 ஆண்டுகள் பழமையான இந்த பத்திரிக்கை யின் நிருபர்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மாட்டியுள்ளனர்.

நேற்று கடைசி பதிப்பு வெளியாகிறது என்பதால், பத்திரிகை விற்கும் கடைகள், கூடுதல் பிரதிகளைக் கேட்டிருந்தன. மேலும், அப்பத்திரிகையில் மிக அதிகளவில், அறக்கட்டளைகளின் விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு, இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கடைசிப் பதிப்பின் லாபம் அனைத்தும் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும்' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.




"நாம் நமது பாதையில் இருந்து தவறி விட்டோம். தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கு பத்திரிகை வருந்துகிறது. அந்தத் தவறான செயலுக்கும், அதனால் பாதிக்கப்பட்டோருக்கு விளைந்த வேதனைக்கும் நியாயம் கற்பிக்க விரும்பவில்லை. வரலாற்றில் ஒரு பெரிய கறையைத் தவிர வேறு ஒன்றையும் விட்டுச் செல்லவும் இல்லை'"  என்று வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டது. 




ரூபர்ட் முர்டோக் மற்றும் CEO ரெபெக்கா ப்ரூக்ஸ்
-------------------------------------------------------------------------------------


சரி .. இப்போ ஒரு முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.
அமெரிக்காவில் பிரபலமான கிறிஸ்தவ போதகர்  ஹரோல்ட் கேம்பிங் (Harold Camping ), சில மாதங்களுக்கு முன், உலகம் 21 May 2011 அன்று அழியப்போவதாக அறிவித்து பெரிய சர்ச்சையை கிளப்பினார்.
அவர் இப்போது கூறுகிறார் நான் கூறியது    "End of world " அல்ல ...நான் சொன்னது " End of the News of the World ".  அதாவது நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு பத்திரிக்கை முடியப்போவதை தான் அவர் சொன்னாராம் ....  நாமெல்லாம் அவரை தப்பா புரிஞ்சிக்கிட்டோமாம்...

Harold Camping